web log free
May 17, 2026

கொழும்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். 

மருதங்கேணிப் பகுதியில் பரீட்சை இணைப்புச் செயலகமாக இயங்கிய பாடசாலை வளாகத்தில் கூடி பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச் சாட்டின் பெயரிலேயே கொழும்பில் வைத்து கொள்ளுப்பிட்டிப் பொலிசார் கைது செய்து மருதங்கேணிக்கு அழைத்து வருகின்றனர். 

இவ்வாறு மருதங்கேணிக்கு அழைத்து வரப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குமூலம் பெறப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd