web log free
April 04, 2026

இரத்தினக்கல் தோண்டிய இரு உயிர்கள் மண்ணுக்குள் புதைந்து பலி

இரக்குவானை ஒபோதகந்த டோலா காட்டில் இரத்தினக்கல் தோண்டியவர்கள் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக இரக்குவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான நாற்பத்தெட்டு வயதுடைய செல்லமுத்து செல்வகுமார் மற்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையான நாற்பத்தைந்து வயதுடைய எஸ்.தியாகராஜா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd