web log free
September 16, 2024

விகாரை இடிப்புக்கு நீதிமன்றம் விதித்த தடை

ஒருகுடாவத்தை சம்புத்தாலோக விகாரையை இடித்து அகற்றுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுமதி வழங்கி கொழும்பு நீதவான் வழங்கிய உத்தரவை அமுல்படுத்துவதை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த விகாரையின் தலைவர் சுகத்ஞான தேரர் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த போதே இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சோபித ராஜகருணா மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனுவை பரிசீலித்தபோதே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.