web log free
October 30, 2025

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சென்ற கடிதம்!

நாடாளுமன்றம் ஜூலை 1ஆம் திகதி கூடும் என்று நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பணிப்புரைக்கு அமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க ஜூலை 01 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (27) விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd