web log free
October 18, 2024

யாரும் எதிர்பார்க்காத நபர் அடுத்த ழபொலிஸ் மா அதிபர் ஆகலாம்

தற்போது வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அடுத்த பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் அரசியலமைப்பு சபைக்கு மூன்று பெயர்களை பரிந்துரைப்பார் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சி.டி. விக்கிரமரத்ன இரண்டு சேவை நீடிப்புகளைப் பெற்ற பின்னர் ஐ.ஜி.பி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

அடுத்த பொலிஸ் மா அதிபரின் சிரேஷ்ட நிலைபடி பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான நிலந்த ஜயவர்தன, எல்.எஸ்.பதிநாயக்க, தேஷ்பந்து தென்னகோன், பிரியந்த வீரசூரிய, பி.பி.எஸ்.எம் தர்மரத்ன ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

அந்த அறிக்கையின்படி, சிரேஷ்ட நிலைக்கு ஏற்ப மூன்று பெயர்களை ஜனாதிபதி தேர்ந்தெடுப்பார்.