web log free
April 02, 2026

ஜனாதிபதி அழைப்பு விடுப்பது திருடனை பிடிக்கவா? காப்பாற்றவா?

தேச நலன் கருதி ஒன்றிணைந்து திருடர்களைப் பிடிக்க எதிர்க்கட்சிகளை ஜனாதிபதி அழைக்கின்றாரா? அல்லது திருடர்களை காப்பாற்றவா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

ரணில் விக்கிரமசிங்க தன்னை ஜனாதிபதியாவதற்கு உதவுவதாக கூறியதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், 2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து ஜனாதிபதியாக வருவதற்கு எவ்வாறு உதவினார் என்பது தனக்கு நன்றாகத் தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு அந்த உதவி தேவையில்லை என்றும், எங்கு செல்வது என்பது அரசியல் பேரங்களால் தீர்மானிக்கப்படுவதில்லை என்றும் நாட்டில் உள்ள இருநூற்றி இருபது இலட்சம் மக்களின் கருத்தின் மூலம் தீர்மானிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

தான் 21 வருடங்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்க விரும்பவில்லை என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd