web log free
May 06, 2025

புதிய பொலிஸ் மா அதிபர் குறித்து இன்று இறுதி முடிவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில், வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

அந்தக் கலந்துரையாடலில் புதிய பொலிஸ் மா அதிபர் யார் என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு யார் நியமிக்கப்பட்டாலும் அவர் 3 மாத காலத்திற்கு மட்டுமே நியமிக்கப்படுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் சேவைக் காலம் கடந்த 26ஆம் திகதி நிறைவடைந்த போதிலும், பொலிஸ் மா அதிபர் பதவி இன்னும் வெற்றிடமாகவே உள்ளது.

அதன்படி, பொலிஸ் மா அதிபர் பதவியில் இல்லாமல் 13 நாட்கள் கடந்து செல்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று பல தேசிய பத்திரிகைகள் சி.டி..விக்கிரமரத்னவுக்கு மீண்டும் சேவையை நீட்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டன. .

எவ்வாறாயினும், பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடலின் போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சரின் தீர்மானம் தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அமைச்சருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd