web log free
April 30, 2025

இத்தாலி ஆற்றில் நீராடச் சென்று பலியான இலங்கையர்கள்

இத்தாலியில் நீரில் மூழ்கி இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையின் வென்னப்புவ பகுதியில் வசித்து வந்த ஒருவரும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்தில் இருவரும் தங்கள் உறவினர்களுடன் இத்தாலியின் மிலன் அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அங்கு தனது 25 வயது மகன் நீரில் மூழ்குவதை பார்த்து 60 வயதுடைய தந்தையும் தண்ணீரில் குதித்துள்ளார்.

எனினும் இருவரும் நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd