web log free
April 30, 2025

கெஹலியவை வீட்டுக்கு அனுப்பும் பிரேரணையில் பலர் கையொப்பம்

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நேற்று (20) பிற்பகல் வரை 42 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி ஆகியோரும் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான கையொப்ப சேகரிப்பு நேற்று காலை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இன்றும் கையொப்பமிட சந்தர்ப்பம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd