web log free
September 16, 2024

காணாமல் போன தாயும் சேயும் சடலமாக மீட்பு

அங்குருவத்தோட்ட, உருதுதாவ பிரதேசத்தில் இருந்து காணாமல் போன இளம் தாய் மற்றும் அவரது சிறிய மகளின் சடலங்கள் அங்குருவாதொட்ட ரத்மல்கொட காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத மகள் தஷ்மி திலன்யா இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளனர்.

அவரது கணவர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லாததால் பொலீஸில் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில் இவர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.