web log free
October 18, 2024

மருமகனுக்கு துரோகம் செய்த மாமனார்! மகளுடன் 9 வருடங்கள் பாலியல் உறவு

ஒரு பிள்ளையின் தாயான 19 வயதுடைய தனது மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.  

10 வயதில் இருந்தே மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளதாகவும், வெளியில்  கூறினால் கொலை  செய்வதாக மிரட்டல் விடுத்ததாகவும் மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எப்பாவல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரின் உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறைத் தீர்ப்பதற்காகச் சென்று தந்தை மற்றும் கணவனுடன் மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்போது கணவர் இடையில் இறங்கிய பின்  யாருமற்ற இடத்தில் வைத்து தந்தை மகளை மீண்டும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

கடைசியாக நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், 10 வயதிலிருந்தே தனது தந்தை தன்னை அவ்வப்போது பலாத்காரம் செய்து வருவதாகவும், தான் எதிர்க்கும் ஒவ்வொரு முறையும் கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் அப்பெண் அளித்த புகாரில் தெரியவந்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.

சிறுவயதில் இருந்தே நடந்து வரும் இந்த செயலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், இனியும் பொறுக்க முடியாத நிலையில் தாயாருக்கும், கணவருக்கும் தெரிவித்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.