web log free
October 18, 2024

பொதுவௌியில் சிறுமியை கடத்த முயற்சி, சந்தேகநபர் கைது

பெற்றோருடன் காலி முகத்திடலை பார்வையிட வந்த 7 வயது சிறுமியை கடத்த முயன்ற 33 வயது நபர் ஒருவர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தை பெற்றோர் உதவி கோரி கூச்சலிட்ட போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உட புஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.