web log free
October 18, 2024

புதிய கூட்டணி குறித்து வாய் திறந்த லன்சா, நடுக்கத்தில் பெசில் அணி

பாராளுமன்ற சுயேட்சை உறுப்பினர்களின் குழுவினால் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணி இதுவரை உருவாகியுள்ள மிகப்பெரிய கூட்டமைப்பாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா குறிப்பிடுகின்றார்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு மேலதிகமாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பல அமைச்சர்கள் மற்றும் குமார வெல்கம ஆகியோரும் இந்த கூட்டணி குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

எதிர்வரும் வாரத்தில் இது போன்ற இன்னும் பல குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் எம்.பி. கூறினார்.

ஏற்கனவே 40க்கும் மேற்பட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய கூட்டணியில் இருப்பதாகவும், அந்த எண்ணிக்கையை 50 ஆக அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் நிமல் லான்சா மேலும் தெரிவித்தார்.