web log free
October 18, 2024

ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளார்.

13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான யோசனைகளை ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்வைக்கவுள்ளார்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை வலுப்படுத்தவும், பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்கவும் கொண்டுவரப்படவுள்ள கட்டளைச் சட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி விரிவான தகவல்களை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Last modified on Wednesday, 09 August 2023 03:27