web log free
October 18, 2024

கிழக்கு ஆளுநருக்கு எதிராக பிக்குகள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிலாவெளி கோகண்ணா விகாரை நிர்மாணப் பணிகளுக்கு ஆளுநரால் இடையூறு ஏற்படுவதை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோகண்ணா விகாரையை பாதுகாக்கும் அமைப்பினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பெருந்தொகையான தேரர்களும் வருகைதந்து பிரதான வீதியை மறித்து வீதியில் படுத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மொறவெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வணக்கத்திற்குரிய பொல்ஹேன்கொட உபரதன தேரர் உள்ளிட்ட தேரர்கள் குழுவொன்று இதற்காக ஒன்றிணைந்துள்ளது.

அவ்வேளையில் ஆளுனர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் இந்த குழப்பங்களுக்கு மத்தியில் இடம்பெற்றதுடன் அந்தக் குழுவின் இணைத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தகபில நுவன் அத்துகோரள திரும்பி வேறு வழியில் சென்றதால் அவரால் ஆளுநரின் அலுவலகத்திற்குச் செல்ல முடியாத நிலையில், குழுவின் மற்றைய இணைத் தலைவரான ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.