web log free
May 07, 2025

சர்வதேச விசாரணை அவசியம்

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் பாராளுமன்றத்தின் தலையீடு தொடர்பில் சனல் 4 வழங்கிய அறிக்கை நிகழ்ச்சி தொடர்பான ஆய்வு பணிகளுக்காக பாராளுமன்ற குழுவொன்றை நியமித்தமை மற்றுமொரு நகைச்சுவை என அருட்தந்தை மல்கம் ரஞ்சித் அவர்களின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பல ஆய்வு ஆணைக்குழுக்கள் பாராளுமன்றத்திற்கு முன்னரும் வெளியிலும் அமுல்படுத்தப்பட்டும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை என இணைய சேனலுடனான கலந்துரையாடலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு சுதந்திரமான மற்றும் பக்கச்சார்பற்ற சர்வதேச தலையீட்டுடன் கூடிய முறையான விசாரணை அவசியமானது என்றும், அதற்காக இந்தக் குற்றத்தின் மூலத்தை வெளிக்கொண்டு வந்த இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் சேவைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்துகிறார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd