web log free
April 04, 2026

பயிரிடப்படாத வெற்று காணிகளுக்கு புதிய வரி

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விவசாயம் செய்யப்படாத காணிகளுக்கு வரி விதிக்கப்படவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவல் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த வரி மூலம் ஈட்டப்படும் பணத்தை சமுர்த்தி குடும்பங்களின் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்த பரிந்துரைக்கப்படுவதாக ராஜாங்க அமைச்சர் கூறுகிறார்.

ஜப்பான் கூட பயிரிடப்படாத நிலத்திலிருந்து வரி வசூலிப்பதாக அனுபா பாஸ்குவல் குறிப்பிட்டார்.

பல்வேறு காரணங்களால் அரச மற்றும் தனியார் காணிகளும் விவசாயம் செய்யாமல் விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயம் செய்யப்படாத காணிகள் காணப்படுவதாகவும் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd