web log free
December 05, 2023

ஜனாதிபதி நாடு திரும்பினார்

கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் இன்று காலை 08.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக "அத தெரண" விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

செப்டெம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெற்ற G-77 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி, பின்னர் அமெரிக்காவில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது வருடாந்த அமர்வின் அரச தலைவர்களின் உச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டிருந்தார்.

Last modified on Sunday, 24 September 2023 06:33