web log free
March 17, 2026

ஜனாதிபதி நாடு திரும்பியதும் குழப்பமடைந்த நபர்கள்

கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கு வந்ததையடுத்து, அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்தவர்களும், மீள்திருத்தம் குறித்து பேசப்படும் விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்களும் உறுப்பினர்களை அழைக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று காலை 08.30 மணியளவில் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் EK-650 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

செப்டெம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெற்ற G-77 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி, பின்னர் அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது வருடாந்த அமர்வின் அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd