web log free
July 01, 2025

பாடசாலைக்குள் கசிப்பு விற்பனை செய்த மாணவன்

கலவானை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் கசிப்பு விற்பனை செய்து கொண்டிருந்த போது கல்லூரி ஆசிரியர் ஒருவரால் பிடிபட்டதையடுத்து கலவானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த பாடசாலையில் 9ம் ஆண்டு படிக்கும் மாணவன் ஒருவரே கசிப்பூ விற்றுள்ளார்.

குறித்த மாணவன் இந்த கசிப்புகளை தண்ணீர் போத்தலில் எடுத்து பின்னர் கப்பில் போட்டு உயர்தர மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd