web log free
July 01, 2025

துறைசார் மேற்பார்வை குழுவின் அதிகாரம் அதிகரிப்பு

பாராளுமன்றத்தின் துறைசார் கண்காணிப்புக் குழுக்களுக்குத் தேவையான அதிகாரத்தை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேற்படி குழுக்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை நடைமுறைப்படுத்துமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்படும்.

உத்தரவுகளை மீறும் அதிகாரிகளைக் கையாள்வதற்கான சட்டமும் இயற்றப்பட உள்ளது.

துறைசார் கண்காணிப்புக் குழு வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமானதாக இருப்பதால், இந்த மாற்றங்களை விரைவில் அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd