web log free
April 19, 2024

பிரதமர் - சீன தூதுவர் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, சீன தூதுவர் செங் ஷியுவான் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இருநாடுகளுக்கு இடையில், பொருளாதாரம், சுற்றுலா, கலாசாரம், மற்றும் தீவிரவாத முறியடிப்பு துறைகளில் எவ்வாறு ஒத்துழைத்து செயற்படுவது என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.