web log free
September 05, 2025

சிபிசி தலைவர் திடீர் பதவி விலகல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய கிடங்கு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனை அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார், மேலும் 14 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட மிகவும் சவாலான காலகட்டத்தில் பதவியை ஏற்ற அவரது அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக உவைஸ் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் அமைச்சர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd