web log free
May 08, 2025

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட வர்த்தமானி

 

மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு  பதவிகாலம் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பணிகள் தொடர்பான அறிக்கையை இறுதி செய்வதற்கு ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இந்த ஆணைக்குழு பல தடவைகள் நீடிக்கப்பட்டது. மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பாரதூரமான மீறல்கள் மற்றும் பிற குற்றங்களை விசாரிப்பதற்காக 2021 ஜனவரி 21 அன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் ஆணைக்குழு தலைவராக உள்ளார்.

ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கை 2021 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், இரண்டாவது அறிக்கை 2022 பெப்ரவரி 18 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd