web log free
September 03, 2025

முன்னாள் இராணுவ வீரர் STF துப்பாக்கிச்சூட்டில் பலி

தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கொல்லப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் முன்னாள் இராணுவ கமாண்டர் ஆவார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அவ்வாறானதொரு நடவடிக்கையின் போது ஹங்வெல்ல பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் இராணுவ கமாண்டோ உயிரிழந்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd