web log free
March 16, 2026

100 வருடங்கள் பழைமையான மரங்கள் அகற்றல்

கொழும்பில் வீதியின் இரு பக்கங்களிலும் உள்ள பாதுகாப்பற்ற மரங்களை இன்று (08) காலை முதல் கொழும்பு மாநகர சபை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதன்படி கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பல வீதிகளில் ஏறக்குறைய 100 வருடங்கள் பழமையான பல பெரிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதோடு சில மரங்களின் பெரிய கிளைகள் வெட்டி அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு டூப்ளிகேஷன் வீதியில் பஸ் மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd