web log free
July 01, 2025

அதிகரிக்கும் மின் கட்டணம்

மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் முதல் மின்கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நேற்று (10) தெரிவித்தார்.

கட்டணத்தை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நாள் முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்த அதிகாரி, பொதுப் பயன்பாட்டுச் சட்டத்தின்படி மக்களின் கருத்துகளைப் பெற 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இம்மாதம் 18ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மக்களிடம் வாய்மூலம் கருத்துக்களை பெற்றுக்கொள்ள சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பிறகு, ஒப்புதல் அளிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம் என அதிகாரி தெரிவித்தார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd