web log free
April 02, 2026

இலங்கை - இந்திய உறவில் புதிய அத்தியாயம் - மோடி அறிவிப்பு

இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் சேவை சனிக்கிழமை கொடியசைத்து துவங்கிய நிலையில், இந்தியா-இலங்கை இடையேயான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை நாங்கள் தொடங்குகிறோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டமை எமது உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான படகுச் சேவைகள் இணைப்பை மேம்படுத்தும், வர்த்தகத்தை மேம்படுத்தும் மற்றும் நமது நாடுகளுக்கு இடையிலான நீண்டகால பிணைப்பை வலுப்படுத்தும் என்று மோடி மேலும் வலியுறுத்தினார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd