web log free
September 05, 2025

பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு வேட்டை தொடர்கிறது

சப்புகஸ்கந்த பிரதேசத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபரொருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 5ஆம் திகதி கந்தானை பொல்பிதிமுகலான பகுதியில் மீன் வியாபாரி ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரே இதன்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சப்புகஸ்கந்த பமுனுவில சமிந்து மாவத்தையில் குறித்த சந்தேகநபர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய அங்கு சென்ற பொலிஸார் மீது, சந்தேகநபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, பொலிஸார் மேற்கொண்ட பதில் துப்பாக்கிப் பிரயோகத்தில் அங்கொடை பகுதியைச் சேர்ந்த 49 வயதான குறித்த சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd