web log free
July 01, 2025

15 மணித்தியால நீர் விநியோகத் தடை

இன்று (21) அமுல்படுத்தப்படவுள்ள 15 மணித்தியால நீர்வெட்டு தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (21) மாலை 5 மணி முதல் நாளை (22) காலை 8 மணி வரை 15 மணி நேரத்திற்கு இந்த நீர் விநியோகம் தடைப்படும்.

கொழும்பின் 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இது அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தல நீர் விநியோகத்தை மேம்படுத்தும் ஆற்றல் சேமிப்பு திட்டத்தினால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd