web log free
July 02, 2025

போதைப் பொருள் கடத்திய பெண் கைது

போதைப்பொருள் ராணி என அழைக்கப்படும் பெண்ணொருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சபுகஸ்கந்த மாகொல தெற்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒன்றரை மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருள், ஐநூறு கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் உள்ளிட்ட சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் வசம் இருந்து நம்பர் பிளேட் மாற்றப்பட்ட இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd