web log free
October 28, 2025

கரையோர ரயில் சேவை தாமதம்

கரையோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதமாகும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டமையே இதற்குக் காரணம்.

ரயில்கள் ஒரு பாதையில் மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் செயற்பாட்டு அத்தியட்சகர் எம்.ஜே.இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.

இதனால் அனைத்து ரயில் பயணங்களும் 30 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக நேரிடும் என்று அவர் கூறுகிறார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd