web log free
March 15, 2026

ஆட்சிக்கு ஒத்துழைப்பு இல்லை என்றால் உடனடி தேர்தல் - ஜனாதிபதி அதிரடி!

ஆட்சியை தொடர்வதற்கு அரசாங்கம் ஆதரவளிக்காது போனால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.

அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டதாக ஜனாதிபதிக்கு பொஹொட்டுவ தலைமை அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் கடும் நெருக்கடியில் இருக்கும் வேளையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மக்களின் பணத்தை வீணடிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி கடுமையாக வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட அமைச்சு மாற்றத்தில் வீச்சு மாற்றமே தவிர புதிய பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும், புதிய அமைச்சுப் பதவிகளை வழங்கி மக்களை சுமை ஏற்ற தாம் தயாரில்லை எனவும் அவர் பொஹொட்டுவவிடம் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd