web log free
September 09, 2025

நாளை அஸ்வெசும கொடுப்பனவு

ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை (1) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அன்றைய தினம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் உரிய பணம் வரவு வைக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், செப்டம்பர் மாதத்துக்கான உதவித்தொகை நவம்பரில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அஸ்வெசும வழங்க ரூ.850 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக, பணம் பெறப்போகும் பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கை, 10 லட்சத்துக்கும் அதிகமாகும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd