web log free
July 02, 2025

டெங்கு – மேல் மாகாணத்திற்கு எச்சரிக்கை

2023ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 14,401 எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 14,401 பேர், கம்பஹா மாவட்டத்தில் 13,958 பேர், களுத்துறை மாவட்டத்தில் 4,354 பேர் உட்பட 68,114 டெங்கு நோயாளர்கள் இதுவரை பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், நாடளாவிய ரீதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

சமீபத்திய தகவல்களின்படி, மேல் மாகாணத்தில் அதிகளவான 32,713 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர், இது 48% என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd