web log free
September 19, 2024

இந்திய நிதி அமைச்சர் இலங்கை வருகை, நாம் 200 நிகழ்வில் பங்கேற்கிறார்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்திற்கு செய்தியாளர் உறுதிப்படுத்தினார்.

அவருடன் இந்திய நாட்டின் நிதி அமைச்சின் 06 உயர் அதிகாரிகளும் ஒரு தூதுக்குழுவாக இலங்கை வந்துள்ளனர்.

இவர்கள் இன்று (01) காலை 08.31 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-192 இல் இந்தியாவின் புதுடில்லியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி புறப்பட்டதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

நாளை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறும் ‘நாம் 200’ என்ற நிகழ்வில் அவர் விசேட அதிதியாக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மற்றும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இந்திய நிதி அமைச்சரை சந்தித்துள்ளனர்.