web log free
July 02, 2025

ஹமாஸ் பிடியில் சிக்கிய இலங்கையர் பலி

ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுஜித் யட்டவர பண்டார மரணமடைந்துள்ளார்.

இதனை இஸ்ரேல் பொலிஸார் உறுதிப்படுத்தியதாக இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

அவரது குழந்தைகளின் டிஎன்ஏ மாதிரிகள் அடையாளம் தெரியாத சடலத்துடன் ஒப்பிடப்பட்டதை இஸ்ரேல் காவல்துறையின் இன்டர்போல் பிரிவு இன்று உறுதிப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd