web log free
May 07, 2025

ஹிருணிகாவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர்கள் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஹிருணிகா பிரேமச்சந்திர நோய்வாய்ப்பட்டிருந்தமையால் நீதிமன்றத்திற்கு வரவில்லை என பிரதிவாதி சட்டத்தரணி தெரிவித்தார்.

ஆனால் இது தொடர்பான மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறியதால் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஏனைய பத்து சந்தேகநபர்களும் திறந்த நீதிமன்றில் முன்னிலையாகினர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd