web log free
July 01, 2025

கோப் குழு தலைவரின் மகன் குழு கூட்டத்தில் - சஜித் சபையில் காட்டம்

கோப் குழுவின் செயற்பாடுகளில் சந்தேகம் இருப்பதாகவும் கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டாரவின் மகனுமான கனிஷ்க பண்டார கோப் குழு கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவரை கோப் குழு கூட்டங்களில் பங்கேற்க வைப்பது நாடாளுமன்ற விதிகளை கடுமையாக மீறும் செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

கோப் குழு தலைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

https://youtu.be/gKhxoUpdhaI

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd