web log free
October 18, 2024

ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு தப்பிச்சென்றதாக தகவல்?

ஐ.எஸ் பயங்கரவாதிகள் சிலர் இலங்கையிலிருந்து இந்தியாவின் இலட்சத்தீவிற்குச் சென்றுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐ.எஸ் பயங்கரவாதிகள் 15 பேர் இலங்கையிலிருந்து படகு மூலம் இந்தியாவிற்குச் சொந்தமான இலட்சத்தீவுகளை சென்றடைந்துள்ளதாக இந்திய புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இதனையடுத்து இந்தியாவின் கேரளாவில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.