web log free
October 14, 2025

இன்று மாலை கடும் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (17) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மி.மீ. 50 டிகிரிக்கு மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களிலும் வடமாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிடுகிறது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd