web log free
December 10, 2023

படகு கவிழ்ந்து காணாமல் போன மீனவர்கள் மீட்பு

மாரவில முதுகடுவ பிரதேசத்தில் கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் மீட்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டவர் உட்பட ஐந்து பேர் கொண்ட குழு மீன்பிடிப்பதற்காக சிறிய படகு ஒன்றில் கடலுக்குச் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

கவிழ்ந்த படகின் உரிமையாளர் மாரவில பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

படகை இயக்கிய நபர்கள், கரையில் இருந்த மீனவர் ஒருவருக்கு தொலைபேசி செய்தி மூலம் அவசர நிலையைத் தெரிவித்தனர். பேரிடர் அழைப்பின் பேரில், உள்ளூர்வாசிகள் குழு தகவலறிந்த இடத்திற்கு வந்து, படகு நடத்துனரை மீட்டு, அவரை பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர்.

கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தொடர்ந்து காணாமல் போன படகில் இருந்த எஞ்சிய நான்கு பேரும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.