web log free
September 09, 2025

மாநாட்டை தவிர்க்கும் நிலையில் மொட்டு கட்சி அமைப்பாளர்கள்

மொட்டு கட்சி வருடாந்த நிகழ்வுக்காக கட்சி உறுப்பினர்களை கூட்டிச் செல்லும் போது அமைப்பாளர்கள் பாரிய பிரச்சினையை எதிர்கொள்வதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த காலங்களில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் இருவரையும் புறக்கணித்தமையே இதற்குக் காரணம் என மேல்மாகாண பிரதம அமைப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் அதனை கருத்தில் கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமையினால் பல ஆசன அமைப்பாளர்கள் இந்த வருடம் மொட்டு வருட பூர்த்தி மாநாட்டை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd