web log free
May 19, 2026

மீண்டும் உயரும் உணவுகளின் விலை

அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் உணவின் விலை தொடர்பில் குறிப்பிட்டுள்ளது.

அதாவது மீண்டும் ஒருமுறை உணவகங்களில் சிற்றுண்டி உள்ளிட்ட இதர உணவுகளின் விலையை உயர்த்த வேண்டும் என கோரியுள்ளனர். 

முட்டை, இறைச்சி, மீன், சீனி மற்றும் கீரி சம்பா அரிசி போன்றவற்றின் விலைகள் அதிகரித்ததன் காரணமாகவே இந்த விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உணவுப் பொருட்களின் விலைகள் எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd