web log free
January 26, 2026

மக்கள் முடிவு செய்துவிட்டனர் அதனால் சஜித்துடன் பேச ஒன்றுமில்லை

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பேமதாசவுடன் கலந்துரையாடப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் கேட்பது தற்போதைய ஜனாதிபதியை எனவும் அதனால் எதிர்க்கட்சிகளுடன் பேசுவதற்கு தனக்கு எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுக்கும் போது ரணில் விக்கிரமசிங்கவிற்கு வேட்புமனுக்களை கையளிப்பது மட்டுமே எஞ்சியுள்ளதாக அவர் கூறுகிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd