web log free
February 01, 2026

ஜனாதிபதி தேர்தல் களத்தில் ரொஷான்

நாட்டு மக்கள் தம்மை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டால் அந்த கோரிக்கையை நிராகரிக்கப் போவதில்லை என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (15) மல்வத்து அஸ்கிரி நா தேரர்களை வணங்கி ஆசி பெற்றதன் பின்னர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் முதலில் மல்வத்து மகா விகாரையின் மகாநாயக்கர் திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் திம்புல்கும்பூர் விமலதம்ம நஹிமி ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

இன்று எங்கும் மோசடியும், ஊழலும் காணப்படுவதாக இரு பீடாதிபதிகளுக்கும் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அஸ்கிரி மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.

இன்று இந்த நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மோசடியும், ஊழலும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நடைபெறுவதாகவும், மோசடி மற்றும் ஊழல்களை சுட்டிக்காட்டும் அனைவரின் கழுத்தையும் துண்டிக்கப்படும் நிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கான தனது போராட்டத்தை தொடரவும், கிரிக்கெட் ஊழல்வாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றவும், இந்த நாட்டில் மோசடி மற்றும் ஊழலை இல்லாதொழிக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd