web log free
September 03, 2025

போதை வில்லைகளுடன் இருவர் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத போதை வில்லைகளுடன் இருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமிருந்து 18000 சட்டவிரோத போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கைப்பற்றப்பட்ட போதை வில்லைகளின் பெறுமதி 21 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd