web log free
January 09, 2026

கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவும்

இந்தியாவில் இருந்து பதிவாகியுள்ள JN1 புதிய கோவிட் விகாரத்தை சுகாதார அமைச்சகம் தொடர்ந்து கவனித்து வருவதாக தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அதன்படி, இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனையில் எந்த நோயாளியும் பதிவாகவில்லை என்று அமைச்சர் கூறினார்.

அப்படியிருந்தும், கடந்த கோவிட் பருவத்தில் பின்பற்றப்பட்ட முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அமைச்சர் கூறினார். 

மேலும், நாடு முழுவதும் மீண்டும் பரவி வரும் அம்மை நோயைக் கட்டுப்படுத்த தேவையான நோய்த்தடுப்பு தடுப்பூசி திட்டத்தை அடுத்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

ஸ்திரமான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd