web log free
September 03, 2025

லிந்துலை தோட்ட லயன் குடியிருப்பில் தீ விபத்து

தலவாக்கலை, லிந்துல பெரிய ராணிவத்தை தோட்டத்திலுள்ள லயன் வீடுகளில் இன்று (04) அதிகாலை தீ பரவியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

லயன் வீடொன்றில் ஏற்பட்ட தீயை அணைக்க தோட்ட பணியாளர்கள் வீட்டின் இருபுறமும் இருந்த இரண்டு வீடுகளின் கூரைகளை விரைவாக அகற்றியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த தீயினால் தோட்ட வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும், அங்கிருந்த சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக குறித்த மூன்று லயன் வீடுகளிலும் வசித்து வந்த சுமார் 10 பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன், அவர்களை தற்காலிக இடத்தில் தங்க வைக்க தோட்ட முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd