web log free
February 09, 2026

இன்று தொடக்கம் முன்னெடுக்கப்பட உள்ள திட்டம்

இன்று (07) முதல் டெங்கு நுளம்புகளை அழிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேசிய மட்டத்தில் தொடர் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது சுகாதார அமைச்சகத்தால் முன்னெடுக்கப்படுகிறது. 

இதன்படி, நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள இந்த விசேட தேசிய மட்டத் தொடர் வேலைத்திட்டங்கள் டெங்கு அபாயப் பகுதிகளை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த விசேட நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சுகாதார மற்றும் வைத்திய அதிகாரி அலுவலகங்களிலும் நடத்தப்படுகிறது.

மேலும், இலங்கை காவல்துறை, ஆயுதப்படை, சிவில் பாதுகாப்புப் படை, டெங்கு நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மற்றும் சமூக சுகாதார குழுக்களின் கிராமக் குழு உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd